என்னை பற்றி
- Lakshmijothi92
- என் பெயர் லட்சுமி நான் பிறந்தது ஆம்பூர் நான் +2 வரை படித்திருக்கிறேன் என் அப்பா ஜோதி அம்மா சுலோசனா.எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன். எனக்கு போலீஸ் ஆக விருப்பம்.
Monday, October 11, 2010
அன்பு;
உன்னை காணும் வரை சொர்கத்தை பார்த்ததுயில்லை,
உன்னை கண்ட பின் சொர்கமே தேவையில்லை,
உன் அன்பு மட்டும் போதும் நான் வாழும் வரை!
*********
மீண்டும் ஒரு ஜென்மம் இருப்பது,
நிஜமானால் நீ மட்டும் போதும்,
உறவாக அல்ல உயிர் தரும் நட்பாக,
***********
பூவின் மொட்டுகளை போல மௌனமாக,
இருக்காமல் மலர்ந்த பூக்களை போல,
சிரித்து கொண்டே இருங்கள் ,
***********
Friday, October 8, 2010
உருளைக்கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பச்சை மளகாய் - 1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடலைமாவு - கால் கப்பு
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணை - தேவையான அளவு
செய்முறை;
உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்குடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து பிசையவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் போட்டு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். உருளைக்கிழங்கு கலவையை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, கடலை மாவு கலவையில் முக்கி எண்ணையில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாற, சுவையாக இருக்கும்.
ஊட்டச்சத்து விவரங்கள்;
உருளைக்கிழங்கில் இருந்து உடனடி சக்தி கிடைக்கும். இது எளிதில் ஜிரணமாகக் கூடியது. எனவே இதனை இரண்டு வயதிலிருந்து கொடுக்கலாம். பச்சை மிளகாயில் வைட்டமின் 'சி' இருப்பதால், நாம் ணாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் தன்மையை அதிகருக்கிறது. மாலைநேரச் சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு இது.
கலக்கல் காமெடி
ஜோக்ஸ்1.உட்கார முடியாத தரை -புளியோதரை
2.உன்ன முடியாத மீன் - வீன்மீன்
3.பேசமுடியாத வாய் - செவ்வாய்
4.தின்ன முடியாதபன் -ரிப்பன்
5.பன் மேலே தண்ணீர் உற்றினால் என்ன ஆகும்?
பன்னீர் ஆகும்
6.உடுத்தி கொள்ள முடியாத டிரஸ்-அட்ரஸ்
7.எச்.எம்.டி வாச்சியில் ஏன் முள் இல்லை -அது சைவம்கிறதால்
8.போட முடியாது டவ்ஸ்ர்- புல்டவ்ஸர்
9.கப்பல் போவது எதுல டீசல்லா பெட்ரொல்லா-தண்ணீரில் போவது
Thursday, October 7, 2010
அன்பானவன்
என்னுள் புதைந்து இருந்த.
என்னை மீட்டு எடுத்தவன் -நீ.
என்னுள் தொலைந்த என்
திறமையை தட்டி எழுப்பியவன் -நீ.
எனக்கு ஒரு நல்ல கணவன் மட்டும்
அல்ல ஒரு நல்ல நண்பாகவும் உன்னை
பார்க்கையில் உணர்ந்தேன்!
கணவனாய் உன் கை பற்றினேன்-நீ
ஒரு நல்ல நண்பனாய் என் கையை
விடாமல் என்னுடன் நடந்தாய்.
குருவி தன் குஞ்சை தன்(சிறகுகுள் பாதுகாப்பது போல் நீ)
(என்னை உன்னுள் வைத்து பாதுகாத்தாய்)
என்னை மீட்டு எடுத்தவன் -நீ.
என்னுள் தொலைந்த என்
திறமையை தட்டி எழுப்பியவன் -நீ.
எனக்கு ஒரு நல்ல கணவன் மட்டும்
அல்ல ஒரு நல்ல நண்பாகவும் உன்னை
பார்க்கையில் உணர்ந்தேன்!
கணவனாய் உன் கை பற்றினேன்-நீ
ஒரு நல்ல நண்பனாய் என் கையை
விடாமல் என்னுடன் நடந்தாய்.
குருவி தன் குஞ்சை தன்(சிறகுகுள் பாதுகாப்பது போல் நீ)
(என்னை உன்னுள் வைத்து பாதுகாத்தாய்)
Saturday, October 2, 2010
படித்ததில் பிடித்தது
கண்களில் படுவதெல்லாம் இதயத்தில்இடம் பிடிப்பதில்லை..
இதயத்தில் இடம் பிடிப்பதெல்லாம்
கண்களின் அருகில் இருப்பில்லை...
உன்னைப் போல.!
********
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும்
நேசிக்க முடியாது...!
நேசிகின்ற எல்லோரையும்
பார்க்க முடியாது....!
********
விழுந்த இடன் மறைந்து போக
நான் மழை துளி இல்லை...!
உன்னுடன் இருதி வரை..
இருக்கும் கண்ணீர் துளி....
********
உண்மையான காதலை இழந்த பின்பும்..
அதை மறக்காமல்..
நினைத்து கொண்டு வாழும்
அணைவரும்..
ஒரு உயிர் உள்ள ''தாஜ்மஹால்'' தான்...
********
எனக்கு பிடித்தது
கவிதைநல்ல அன்பு தென்றல் காற்றை போன்றது...!
அதை பார்க்க முடியாது..!
ஆனால் உணர முடியும் நான் உணருகிறேன் ''உன்னால்''
********
நிழல்கள் கூட வெனிச்சம் உள்ளவரை தான் தனக்கு வரும்!
உண்மையான ''நட்பு'' உயிர் உள்ளவரை துணைக்கு வரும்...!
********
நீ'' நேசிக்கும் போது நேசிப்பவன் நண்பன் அல்ல''நீ ''வெறுக்கும் போது நேசிப்பவன் உண்மையான
நண்பன்''
இது தான் உண்மையான நட்பு...
********
நீ நேசிப்பவர்க்கு உன் இதயத்தில்
இடம் கொடு.
உன்னை மட்டுமே நினைக்கும்
இதயத்திருக்கு உன் உயிரையும்
சேர்த்து கொடு...
********
அருகில் இருப்பவர் எல்லாம் அன்பானவர் இல்லை...
அன்பானவர் எல்லாம் அருகில் இருப்பதில்லை
நம்மை போல!
********
நான் கண்ணீர் மாதிரி...!
உன் சந்தோஷத்தில் உன் கூட
இருக்க மாட்டேன்.
ஆனால்
உன் கஷ்டத்தில் எப்போழுதும்
உன் கூடவே இருப்பேன்
*******
Subscribe to:
Posts (Atom)




